பரபரப்பு... நடிகர் கஞ்சா கருப்பு அரசு மருத்துவமனையில் போராட்டம்!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் போரூரில் சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக தினமும் ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு சிகிச்சைக்காக இன்று காலை 7 மணிக்கு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் மருத்துவர்கள் ஏன் வரவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் மருத்துவர்கள் வராததால் ஆத்திரம் அடைந்த நடிகர் கஞ்சா கருப்பு மக்களுடன் சேர்ந்து மருத்துவர்கள் இல்லாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார். காலை 7 மணியில் இருந்து மருத்துவர்கள் இல்லாமல் காக்க வைத்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
