நடிகை மகாலட்சுமி கணவர் மீது மோசடி புகார்!!
தமிழில் முருங்கைக்காய் சிபிஸ், நட்புனா என்னனு தெரியுமா திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தரன் சந்திரசேகர். இவர் விவாகரத்தான நிலையில், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ரவீந்தரன் சந்திரசேகர் தன்னிடமிருந்து பணம் பெற்று மோசடி செய்ததாக கூறி அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் என்பவர், ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது . அதில் ரவீந்தர் பணத்தை விரைவில் செட்டில் செய்து விடுவதாகவும், சமாதானமாக செல்வதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், அமெரிக்க வாழ் இந்தியரான விஜய்க்கு, ரவீந்தர் அனுப்பிய இரு வங்கி காசோலைகளும், வங்கியில் பணமில்லாமல் திரும்பிவிட்டதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக விஜய் கூறியுள்ளார். ஏற்கெனவே நடிகை மகாலட்சுமியைச் சுற்றி அவ்வப்போது சர்ச்சையான செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த மோசடி புகார் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?