வைரல் வீடியோ!! பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகை சமந்தா!!

 
சமந்தா

தமிழ் திரையுலகில்  ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் 2010ல் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா  தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக  தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 


இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தா  தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் பல படங்களில் இருந்து அவர் விலகி கொண்டார்.   குணமடைந்த பின், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அதில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து மீண்டும் நடித்தார் சமந்தா.
 இதையடுத்து நடிகை சமந்தா நடிப்பில் சிட்டாடெல் என்கிற வெப் தொடரும் தயாராகி வருகிறது. இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்கி வருகின்றனர். இதையடுத்து நடிகை சமந்தா தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.  

சமந்தா

நேற்று மாலை 3 மணி அளவில் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு நடிகை சமந்தா தனது உதவியாளர்களுடன்  வந்தார்.   சமந்தா பண்ணாரி அம்மனை பார்த்து மனமுருக வேண்டினார். தொடர்ந்து அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சில நிமிடங்களில் அங்கிருந்து பக்தர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு சென்றார். அப்போது கோவில் பணியாளர்கள் சமந்தாவை சூழ்ந்து கொண்டு குழு புகைப்படம் எடுத்து மகிழந்தனர். அதற்குள் சமந்தா கோவிலுக்கு வந்து தகவல் பரவியதால் ரசிகர்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். அதனால் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.  அனைவரையும் பார்த்து கை அசைத்தபடி காரில் ஏறி சென்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web