நாளையே கடைசி...அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை!

 
கல்லூரி மாணவிகள்

 தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். தற்போது 2 ம் கட்ட கலந்தாய்வு மாணவர்களுக்கு முடிய உள்ளது. இந்நிலையில் 63 சதவீதம் இடங்கள் மட்டுமே நிரம்பி இருப்பதால் மீண்டும் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஜூலை 3 முதல் ஜூலை 5ஆம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கல்லூரியில் சேர்க்கும் நடவடிக்கைகள் ஜூலை 8ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையே  கடைசி நாள் என்பதால் மேலும் கூடுதலான மாணவர்கள் விண்ணப்பித்து பயனடைலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

யுபிஎஸ்சி தேர்வு விடுமுறை மாணவர்கள் கல்லூரி

ஜூலை 3ம் தேதி  புதன்கிழமை முதல் ஜூலை 5ம் தேதி வரை TNGASA இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 8ம் தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறோரு பாடப்பிரிவில் மாற விரும்பினால் அந்த துறையில் காலியிடம் இருப்பின் வாய்ப்பு வழங்க வேண்டும்.

பொறியியல் கல்லூரி

ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடத்தி முடிக்கப்பட்ட கலந்தாய்வுகளில் 164 அரசு கலை கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 63 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web