மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம்...பட்டியலின மாணவன் மீது தாக்குதல்!!

 
நாங்குநேரி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்து கழுகுமலை லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிராஜ். இவரது மகன் ஹரிபிரசாத் (17). பட்டியலின வகுப்பினை சேர்ந்த இவர்,‌ கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு கணக்குப் பதிவியல் பிரிவில் படித்து வருகிறார். அதே பள்ளியில் படிக்கும் ராஜகுரு (17), ஷேமந்த் குமார் (17) ஆகியோர் 11-ம் வகுப்பு அறிவியல் பாட பிரிவில் பயின்று வருகின்றனர்.

நாங்குநேரி
இந்நிலையில் நேற்று மாலையில் பள்ளிக்கு வெளியே ராஜகுரு, ஹேமந்த் குமார் இருவரும் வெளியே சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மாணவர் ஹரிபிரசாத் இருவரும் சண்டை போடுவதை தடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவர் ராஜகுரு 10 பேரை அழைத்துக்கொண்டு நேற்று இரவில் லட்சுமிபுரம் சென்று ஹரிபிரசாத்தை சாதி ரீதியாக திட்டி தாக்கியுள்ளார்.

நாங்குநேரி
இதில் ஹரிபிரசாத் முகம், கை போன்ற பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டது. மேலும் அவரது செல்போனையும் அடித்து நொறுக்கினர். காயம் அடைந்த ஹரிபிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் போது ஹரிபிரசாத் சாதிய ரீதியாகத் தன்னை திட்டியதாக தெரிவித்தார். இதையடுத்து இரண்டு பள்ளி மாணவர்கள், 2 கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 5 பேரை பிடித்து காவல்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளது.ஏற்கனவே நாங்குநேரி பள்ளியில் பட்டியலின வகுப்பினை சேர்ந்த மாணவர் மற்றும் அவரது தங்கை தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கழுகுமலையில் பட்டியலின மாணவர் மீது ‌மாற்று சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web