அரை நிர்வாண கோலத்தில் சிஷ்யையை மணந்த அகோரி பாபா!! திருச்சியில் பரபரப்பு!

 
அரை நிர்வாண கோலத்தில் சிஷ்யையை மணந்த அகோரி பாபா!! திருச்சியில் பரபரப்பு!

திருச்சியில் பிரபலமான சாமியார் அகோரி பாபா. இவர் நேற்று தனது சிஷ்யையை அரை நிர்வாண கோலத்தில் சங்குகள் முழங்க திருமணம் செய்து கொண்டது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகோரி பாபா மணிகண்டன், இள வயதிலேயே காசிக்கு சென்று அங்கே சாமியார்களோடு சாமியாராக தங்கியிருந்தார். காசியில், அகோரிகளுடன் பல காலங்கள் தங்கியிருந்ததால், அவர்களது வாழ்க்கை முறையை தமிழகம் திரும்பியதும் கடைப்பிடித்து வந்த அகோரி பாபா மணிகண்டன், அவர்களோடு சிவ பக்தனாக மாறி அகோரியாகவே வாழ்ந்து வருகிறார்,

அரை நிர்வாண கோலத்தில் சிஷ்யையை மணந்த அகோரி பாபா!! திருச்சியில் பரபரப்பு!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சுடுகாடுகளில் தங்கியிருந்த மணிகண்டன், பின்னர் தனது சொந்த ஊரான அரியமங்கலம் அருகே மக்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அங்கிருக்கும் சுடுகாட்டில் நள்ளிரவில் அடிக்கடி இவர் பூஜை செய்வது வழக்கம்.

இவரை பல ஊர்களில் இருந்து சந்திக்க வருபவர்களை சிஷ்யர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களைத் தங்க வைத்து சிறப்பு பயிற்சிகளையும் வழங்கி வருகிறார். சமீபத்தில் விபத்தில் பலியான இவரது சிஷ்யரின் உடலுக்கு அகோரி மணிகண்டன் திருச்சியில் இறுதி சடங்கு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்து போன சிஷ்யரின் உடலின் மீது ஏறி அமர்ந்து அகோரி மணிகண்டன் விசித்திரமாக பூஜை செய்தார். இதை ஆன்ம சாந்தி பூஜை என்று சொல்ல, சமூக வலைதளங்களில் இந்த பூஜை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரை நிர்வாண கோலத்தில் சிஷ்யையை மணந்த அகோரி பாபா!! திருச்சியில் பரபரப்பு!

இந்நிலையில் அகோரி சாமியார் மணிகண்டன் நேற்று கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா என்ற தனது சிஷ்யையை திருமணம் செய்து கொண்டார். இவர் மணிகண்டனுடன் தங்கியிருந்து பயிற்சி எடுத்து வந்தவர். பின்னர் அகோரி சாமியார் மணிகண்டனுடன் காதல் வயப்பட்ட நிலையில், நேற்று பிரியங்காவை இந்து முறைப்படி மந்திரங்கள் ஓத திருமணம் செய்து கொண்டார். அருகில் இருந்த மற்ற அகோரிகள் சங்குகள் ஊதி திருமணத்தை நடத்தி வைத்தனர். உடல் முழுக்க விபூதி பூசி அகோரி மணிகண்டன் அரை நிர்வாணத்தில் காட்சி அளித்தார். பிரியங்காவும் முகம் முழுக்க விபூதி பூசி இருந்தார்.

From around the web