பகீர்... பெற்றோரை கொன்றுவிடு.... ஏஐ 14 வயது சிறுவனுக்கு அறிவுரை !

 
ஏஐ
செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தில்  டெக்சாஸ் 14 வயது சிறுவன் ஒருவர் அளவுக்கு மீறி செல்போன் பயன்படுத்தியதால், அதனை கட்டுப்படுத்த திட்டமிட்டு அவரிடம்  கொடுப்பதை நிறுத்தி வைத்துள்ளனர்.  இதனால் பதற்றமடைந்த சிறுவன் Character.AI என்ற AI சாட்பாட்டின் உதவியை நாடியுள்ளார்.

ஏஐ

சிறுவனின் செல்போன் பயன்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அந்த AI சாட்பாட் அதிர்ச்சிகரமான பதிலை வழங்கியுள்ளது. அதன்படி  செல்போன் பயன்பாட்டுக்கு பெற்றோர் தடை விதிப்பதாகவும் அதற்கான தீர்வு குறித்து சிறுவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த AI சாட்பாட், பெற்றோரை கொலை செய்து விடுவதே தீர்வு என அறிவுறுத்தியுள்ளது. சாட்பாட்டின் இந்த பதிலை அறிந்திருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜிமெயில் ஏஐ

அத்துடன் சம்பந்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு  நிறுவனம் மீது வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளனர். இது  குறித்த  வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சாட்பாட் உடனான சிறுவனின் உரையாடல் தொடர்பான ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இச்சம்பவம், AI தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் நிறுவனங்கள், அதன் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது.

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!