'சர்கார்' பேனரைக் கிழித்ததால் அதிமுக ஆட்சியை இழந்தது - அமைச்சர் ஆனந்த் அதிரடி!

 
சர்க்கார் ஆனந்த்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, நடிகர் விஜய்யின் 'சர்கார்' திரைப்பட பேனரை அதிமுகவினர் கிழித்த சம்பவத்தைக் குறிப்பிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் என்.ஆனந்த் (புஸ்சி ஆனந்த்) சுவாரஸ்யமானக் கருத்து ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

ஓய்வுக்குப் பிறகு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றே முதலமைச்சர் விஜய் ஆரம்பத்தில் கூறிவந்ததாகச் சுட்டிக்காட்டினார். "அன்று 'சர்கார்' திரைப்படத்தின் பேனரை அதிமுகவினர் கிழிக்காமல் இருந்திருந்தால், அவர்களே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார்கள். அந்த பேனரைக் கிழித்த காரணத்தினால்தான் அவர்களது ஆட்சியே போனது" என்று பேரவையில் அவர் பேசினார்.

தங்களுக்குத் தெரிந்ததெல்லாம், உயிர்மூச்சும் நாடியுமாக விளங்கும் கட்சித் தலைவர் மட்டுமே என்றும், வேறு எதுவும் தங்களுக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்