உஷார்... அடுத்த சில நாட்களில் 106 டிகிரி வரை எகிறும் வெயில்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வயதானவர்கள், குழந்தைகள், இணை நோய் இருப்பவர்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, நீலகிரி, கரூர், கடலூர், தர்மபுரி, சேலம், திருவள்ளூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் நிலவி வருகிறது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். வயதானவர்களையும், குழந்தைகளையும் தனியே எங்கேயும் அனுப்பாதீர்கள். வெயில் காலங்களில் கூடுமானவரை பருத்தியினால் ஆன ஆடைகளை அணியுங்கள்.
உள் தமிழகத்தில் பொதுவாக பல பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். ஏப்ரல் 6ம் தேதி வரை இதே நிலை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 100 டிகிரியை ஒட்டியே இருக்கும். இதனால் அவசிய காரணங்களின்றி 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!