உஷார்... அடுத்த 3 தினங்களுக்கு வெயில் 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு!

 
வானிலை ஆய்வு மையம்

இன்று முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கும் என்றும், அதிக வெப்பநிலை காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில்
அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று அறிவித்துள்ளது.

மதிய நேரத்தில் குழந்தைகளையும், முதியோர்களையும் வீட்டை விட்டு தனியே வெளியே அனுப்பாதீர்கள். நீர்சத்து மிகுந்த ஆகாரங்களை உட்கொள்ளுங்க. வெயில் காலங்களில் பருத்தியிலான ஆடைகளை அணியுங்கள்.

From around the web