இன்று மணற்கேணி செயலி தொடக்கம்!! 1 முதல் 12ம் வகுப்பு வரை எல்லாப் பாடங்களும் காணொலி வடிவில்!!

 
மணற்கேணி

தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு கற்றலை இனிமையாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில்  முதல்முறையாக காணொலி வடிவில் பாடங்களை அளிக்கும், 'மணற்கேணி' என்ற செயலி இன்று ஜூலை 25ம் தேதி  தாம்பரத்தில் உள்ள அரசு பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்  "நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை காணொலி வடிவத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது.

மணற்கேணி

 தமிழக கல்வி முறையில் உயர்தரமான டிஜிட்டல் பாடங்களை உருவாக்கவும், இருப்பில் வைக்கவும், வகுப்பறைகளை மேலும் மேம்படுத்தவும் சுவாரஸ்யமானதாக மாற்றவும்  இந்த காணொலிப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.  தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும்  27,000 கருப்பொருள்களாக  வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை பள்ளிகள், வகுப்பறைகள் தாண்டி  அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கப் பாடங்களை உருவாக்கி அளித்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை. 

அன்பில் மகேஷ்
இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு மாநில அரசு தன்னிடமுள்ள வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கி இருக்கும் செயலி இதுவே. இந்த செயலியின் மூலம்  ஆசிரியர்கள் அதில் உள்ள பாடப்பொருட்களின் துணைக்கொண்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம். இதன் மூலம்  25 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய செயலி வெளியீட்டு விழா தாம்பரம் பெருநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்  இன்று ஜூலை 25ம் தேதி  செவ்வாய்க் கிழமை அன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த வெளியீட்டு விழாவில் uncco துணை பொதுச்செயலாளர்/நிர்வாக பொதுச்செயலாளர் இப்ராகிம் தயாவ் அவர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தாம்பரம் எம்எல்ஏ ராஜா  என பலர் கலந்து கொள்கின்றனர் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web