நாளை மறுநாள் முதல் சதுரகிரி செல்ல 4 நாட்களுக்கு அனுமதி!

 
இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!
 தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத பிரதோஷம், பௌர்ணமியை ஒட்டி செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 18 வரை சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் வத்திறாயிருப்பு  மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற  சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில். இந்தக் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில்  பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.   

சதுரகிரி

இதற்காக இன்று முதல் பௌர்ணமி வரை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி  தரிசனம் செய்வதற்காக இன்று   முதல்   4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது. பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதுரகிரி

மலையேற அனுமதிக்கப்பட்ட நாட்களில் திடீர்  கனமழை பெய்தால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி மலையேற சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும். பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்பது உட்பட  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா