அம்மாடியோவ்! கொரோனா காலத்திலும் சாதனை படைத்த சிகரெட் விற்பனை!

 
அம்மாடியோவ்! கொரோனா காலத்திலும் சாதனை படைத்த சிகரெட் விற்பனை!


இந்தியாவில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் சில துறைகள் ஏற்றம் அடைந்துள்ளன. அந்த வகையில் இந்தியாவிலேயே சிகரெட் உற்பத்தியில் ஐ.டி.சி. நிறுவனம் முண்ணனியில் உள்ளது. இந்தியாவில் விற்கப்படும் 4ல் 3 சிகரெட்டுகள் இந்த நிறுவனத்தின் மூலமே உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாடியோவ்! கொரோனா காலத்திலும் சாதனை படைத்த சிகரெட் விற்பனை!

அந்த வகையில் சிகரெட் ஏகபோக விற்பனையாளராக ஐ.டி.சி. நிறுவனம் திகழ்ந்து வருகிறது.இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.3,013 கோடி லாபம் சம்பாதித்துள்ளது. அதாவது இது 28 சதவீதம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ஐ.டி.சி. நிறுவனத்துக்கு ரூ.12,950 கோடி வருமானம் கிடைத்தது. வட்டி, வரி, தேய்மானம் என அனைத்து செலவுகளும் போக ரூ.3,013 கோடி லாபம் சம்பாதித்து இருக்கிறது என புள்ளிவிவரம் கூறுகிறது.


கொரோனா காலத்துக்கு முந்தைய நிலையை எப்போதோ எட்டி விட்டதாகவும், தொடர்ந்து வளர்ச்சியில் இருப்பதாகவும் ஐ.டி.சி. நிறுவனம் கூறி உள்ளது. ஐ.டி.சி. நிறுவனத்தை பொறுத்தவரை சிகரெட் உற்பத்திதான் முக்கியமாக உள்ளது. சிகரெட் விற்பனை மட்டுமே 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறி உள்ளது. அதாவது கடந்த காலாண்டில் ரூ.5,129 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. ரூ.3,280 கோடி லாபம் கிடைத்துள்ளது.

அம்மாடியோவ்! கொரோனா காலத்திலும் சாதனை படைத்த சிகரெட் விற்பனை!

விற்பனை 33 சதவீதம் அதிகரித்து இருந்தாலும் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவு என்றே அந்த நிறுவனம் கூறி இருக்கிறது. அதிவேக நுகர்வு பொருள் விற்பனையில் ரூ.173 கோடி லாபம் சம்பாதித்து இருக்கிறது. இதன் விற்பனை 10 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

From around the web