அம்பானியை அதிர வைத்த ராம்ஜி நகர் கொள்ளையர்கள்!

 
அம்பானி

விருந்துக்கு வந்தவர்களால் நிறுத்தப்பட்டு இருந்த மெர்சிடிஸ் கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து ரூபாய் 10 லட்சம் ரூபாய் மற்றும் லேப்டாப் திருடப்பட்டது தொடர்பாக, விசாரணை நடத்திய காவல்துறையினர் திகைத்துத்தான் போயினர்.கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, விசாரணை மேற்கொண்டதில், இத்திருட்டு தொடர்பாக ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் டெல்லியில் ஜெகன். தீபக். குணசேகர், முரளி. ஏகாம்பரம் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அம்பானி
இது குறித்து ராஜ்கோட் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜு பார்கவ், அவர்கள் கூறுகையில், 'கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் தமிழ்நாட்டில், திருச்சி ராம்ஜிநகரை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் திருடலாம் என்ற நோக்கத்தில் திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஜாம்நகர் சென்று பார்த்த போது அங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக இருந்ததால், அங்கு திருடும் திட்டத்தை கைவிட்டுவிட்டு ஜாம்நகர் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப்பை திருடினார்களாம்

பின்னர் அங்கிருந்து ராஜ்கோட் சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மெர்சிடிஸ் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ரூபாய் 10 லட்சம் பணம் மற்றும் லேப்டாப்பை திருடினர். அதனை தொடர்ந்து டெல்லி புறப்பட்டு சென்றனர். இக்கொள்ளை கூட்டத்திற்கு மதுசூதன் தான் தலைவனாக விளங்கியுள்ளான். அவன் தற்போது தலைமறைவாக இருக்கிறான்.
அம்பானி வீட்டுத் திருடர்கள்
அவன் தான் எங்கு திருடவேண்டும் என்பதை முடிவு செய்வான். மேலும் இக்கும்பல் முக்கிய நகரங்களுக்கு ரயிலில் சென்று கூட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார் கண்ணாடியை உடைத்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்திக்கிறார்கள். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடந்த நான்கு மாதத்தில் ராஜ்கோட், ஜாம்நகர், அகமதாபாத் மற்றும் டெல்லி என 11 இடங்களில் திருடி இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர் மேலும் இக்கும்பல் ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவிலும் தனது வேலையை காட்டி இருப்பதாக தகவல் தெரியவருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web