மாணவர்களுக்கு ஓர் செம்ம அறிவிப்பு.. கல்வித்தொகை பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்..!

 
மாணவர்களுக்கு கல்விதொகை
9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்ப்பட்டுள்ளது.

இதுக்குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு படித்து வரும் 30 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை (YASASVT) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்காக தேசிய தேர்வு முகமையால் கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகை.. எப்படி  விண்ணப்பிக்கணும்? கடைசி நாள்? முழு விவரம் | Scholarships for School  Students in Tamil Nadu: How to Apply ...

ஆனால் அந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது மேற்கண்ட தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று மத்தியஅரசு பொது அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதில், 9 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் அவர்கள் 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்று இருந்தால் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

சிறுபான்மையின மாணவர் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க செப். 9-ம் தேதி கடைசி  நாள் | Student Scholarship - hindutamil.in

எனவே தகுதியான மாணவ-மாணவிகள் அனைவரும் ஆன்லைன் மூலம் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு https://scholarships.gov.in மற்றும் http://socialjustice.gov இந்த ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

From around the web