செங்கடலில் கலந்த பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய்.. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலால் நேர்ந்த விபரீதம்!
செங்கடலில் பயணித்த கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல், கடலில் 29 கிலோ மீட்டர் தூரத்துக்கு கச்சா எண்ணெய் தேங்கி பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
காஸா மீதான இஸ்ரேலின் போர் 4 மாதங்களாக நடந்து வருகிறது. காஸாவுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 18ம் தேதி செங்கடலில் உள்ள பாப் எல் மந்தாப் வளைகுடாவுக்கு சென்று கொண்டிருந்த பிரிட்டனுக்கு சொந்தமான ரூபிமார் என்ற சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. லெபனானில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பலில் கச்சா எண்ணெய் மற்றும் உரங்கள் ஏற்றப்பட்டன.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் சரக்கு கப்பல் பலத்த சேதம் அடைந்ததால், பணியாளர்கள் வெளியேறினர். இதனால், சரக்கு கப்பல் தற்போது பணியாளர்கள் இல்லாமல் செங்கடலின் நடுவே நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தால், சரக்கு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கசியத் தொடங்கியது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. இது கடலுக்குள் சுமார் 29 கி.மீ. பரவியுள்ளது. மேலும் கப்பலில் உள்ள 41,000 டன் உரமும் விரைவில் வெளியேறலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் செங்கடல் பகுதியில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
முதற்கட்டமாக கப்பலை நடுக்கடலில் இருந்து மீட்டு அருகில் உள்ள துறைமுகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாத வகையில் எண்ணெய் படலத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!