அமெரிக்காவில் தீ விபத்தில் சிக்கிய இந்திய இளைஞர்.. பரிதாபமாக பலியான சோகம்!
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹார்லெமில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவை சேர்ந்த பசில் கான் என்ற இளைஞர் வசித்து வந்தார். குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி இவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அரசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
27 வயது இளைஞரான பசில் கான், ஊடகத்துறையில் பயின்று, அகதிகள் மறுவாழ்வு சூழ்நிலைகள் பற்றிய தகவல்களை சேகரித்து வழங்குவதில் பத்திரிகையாளராக பணியாற்றினார். இந்தியாவில், சிஎன்என், நியூஸ்18 உள்ளிட்ட பல நிறுவனங்களில் முதன்மையாகப் பணியாற்றியவர்.
அமெரிக்காவில் ஊடகத்தில் படித்து பட்டம் பெற்ற இவர், தொடர்ந்து அங்கு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவரது குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டு பசில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் இந்திய தூதரக அதிகாரிகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!