அன்பில் மகேஷ் திடீர் மருத்துவமனையில் அனுமதி!! தொண்டர்கள் அதிர்ச்சி!!

 
அன்பில் மகேஷ்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். இவர் கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில்  கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து  தர்ரமபுரி மாவட்டம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார்.  அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக இதனையடுத்து காரிமங்கலத்தில்  உள்ள தனியார் மருத்துமவையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு   மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அன்பில் மகேஷ்

இந்நிலையில், அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத்தொல்லை  பிரச்சனை இருந்தது கண்டறியப்பட்டது.  சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அவருடன் திமுக  அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கர் மற்றும்  மாவட்ட ஆட்சியர் சாந்தி, எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம்  அனைவரும் மருத்துவமனையில் மருத்துவர்களிடம் அன்பில் மகேஷ் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.  

அன்பில் மகேஷ்

மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில்  நாராயணா இருதயாலயா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web