விறகு வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம்.. மூதாட்டியை அரிவாளால் வெட்டிக் கொன்ற நபர் கைது!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை லோயர் பாரலை பகுதியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட் நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சரோஜினி (72). இவர் ஓய்வு பெற்று கோவையில் உள்ள தனது மகனின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், பொங்கலுக்கு ஓய்வூதியப் பணத்தை வாங்க வால்பாறைக்கு வந்த சரோஜினி, தொழிலாளர்கள் குடியிருப்பில் தனியாக தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் நடந்த நாளில் சரோஜினி ரத்த வெள்ளத்திலும், உடைகள் கிழிந்த நிலையிலும் இறந்து கிடந்தார். வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆதாரங்களை சீரமைக்கத் தொடங்கினர்.
இதையடுத்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி சுரேஷ் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்புக் குழுவில், துணை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணா, ஸ்ரீநிதி, ஆய்வாளர்கள் ஆனந்தகுமார் தாமோதரன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், லோயர் பாரலை எஸ்டேட் தொழிற்சாலை அருகே வசிக்கும் ரங்கநாதன் (24) விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். விசாரணையின் போது, சம்பவம் நடந்த அன்று ரங்கநாதன் குடிபோதையில் சரோஜினியின் வீட்டிற்கு விறகு வெட்டச் சென்றிருந்தார்.
சரோஜினி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ரங்கநாதன் தான் வைத்திருந்த அரிவாளால் அவரது தலையில் அடித்தார். இதனால், மயக்கமடைந்த சரோஜினியை தூக்கி சரோஜினியின் வீட்டிற்குள் வீசினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சரோஜினி ரத்தம் வெளியேறி இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, ரங்கநாதனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் வால்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க