அண்ணாமலையால் அறிவாலயத்தை தொட்டு கூட பார்க்க முடியாது... அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
தமிழகத்தில் சென்னை திருவான்மியூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் " நான் அடுத்த பா.ஜ.க தலைவராக முடியாது என எனக்கு தெரியும். 2026ல் 35 ஊழல் எம்.எல்.ஏக்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள். அதை பார்த்து விட்டு தான் போவேன்.

அத்துடன் நான் இங்கு இருந்து செல்லும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விடமாட்டேன்" என ஆவேசமாக பேசியுள்ளார்.

இது குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ” அறிவாலயத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்கமுடியாது” பிறகு எப்படி செங்கலை அகற்ற முடியும்? திமுகவை அழிக்கப் புறப்படுவோர் தங்கள் அழிவுக்கு தொடக்கப்புள்ளி வைக்கின்றனர். திமுகவினர், அண்ணாமலை போல் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல, கொள்கையுடையவர்கள்” என பதிலடி கொடுத்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
