முழு ஆண்டு தேர்வு தேதிகள் மாற்றம் ... பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு!

 
தேர்வு
 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்க இருப்பதை அடுத்து பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வுகளை அதற்கு முன்பே முடிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் மாநில  பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஏப்ரல் 18 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும் என்று வருடாந்திர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
 தேர்வு
புதிய தேர்வுக் கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருந்தது. அதன்படி 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 தேர்வு

அதன்படி, 4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 10 மற்றும் ஏப்ரல் 12-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 6-ம் தேதிகளுக்கு மாற்றப்பவடுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web