அதிகாலையில் அதிர்ச்சி... மீண்டும் ஒரு விமான விபத்து… 6 பேர் பலி!

சமீபகாலமாக விமான விபத்துகள் அதிகரித்து விமானப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு விமான விபத்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் ஒரு பயங்கர விமான விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவில் பிலடெல்பியா பகுதியில் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி வீடுகள் மீது விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.இந்த விமானத்தில் இருந்த இருவரும் உயிரிழந்த நிலையில் மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் என்பது நடைபெறுகிறது. வாஷிங்டனில் சமீபத்தில் நடுவானில் ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் விமானம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு 67 பேர் இறந்தனர். தற்போது அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து நடந்திருப்பது மக்களிடையே கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.