உடனே விண்ணப்பியுங்க... ரூ.42,000 மாதச் சம்பளத்தில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை!

 
தேசிய தொழில்நுட்பக் கழக
தமிழகத்தில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (JRF) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணபித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்த பணியிடங்கள் : 6  
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், சிவில் பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்இ அல்லது எம்.டெக் படிப்புகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி  

தேசிய தொழில்நுட்பக் கழக
நீர்வள பொறியியல், ஹைட்ராலிக் பொறியியல், ஹைட்ரோ இன்ஃபர்மேடிக்ஸ், வேளாண் பொறியியல், ரிமோட் சென்சிங், புவித் தகவலியல் போன்ற தொடர்புடைய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். கேட் (GATE) தேர்வில் தேர்ச்சி 
முன் அனுபவம் : புவிசார் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீர்நிலை மாடலிங் துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
மாதச்சம்பளம்: மாதத்திற்கு ரூ.37,000 முதல் ரூ.42,000 வரை  
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள்  
தேர்வு முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.  

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உடையவர்கள்  www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :
Dr. Nisha Radhakrishnan, 
Associate Professor, 
Department of Civil Engineering, 
National Institute of Technology, 
Tiruchirappalli – 620 015.

கடைசி தேதி: பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பங்கள் மே 12ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.  
கூடுதல் தகவல்களுக்கு  அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

 

From around the web