அரிகொம்பன் யானை பிடிபட்டது... வைரலாகும் வீடியோ!

 
அரிகொம்பன் யானை

கடந்த சில நாட்களாக தேனி, கம்பம் பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த அரிகொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அரிகொம்பன் யானையைப் பிடிக்க 5 நபர்கள் அடங்கிய கால்நடை மருத்துவர்கள் குழுவினரும், 3 கும்கி  யானைகளும் கம்பம் பகுதிக்கு விரைந்தனர். அரிகொம்பன் யானை அட்டகாசம் செய்து வந்த நிலையில், கால்நடை மருத்துவர்கள் அடங்கி குழுவும், வனத்துறை அலுவலர்களும் தொடர்ந்து யானையின் நகர்வை கண்காணித்து வந்தனர். ஆனால், அதற்குள் அரிக்கொம்பனின் அட்டகாசம் தாங்க முடியாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த யானை அங்கிருந்த வனத்துறை வாகனங்களையும், ஆட்டோவையும் தாக்கியது.


ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த யானையைப் பார்க்கும் ஆர்வத்தில் அந்த வழியில் சென்ற கம்பம் ஆச்சாரியர் தெருவில் வசித்து வரும் பால்ராஜ் என்பவரையும் அரிகொம்பன் தாக்கியது.  இதில் பாதிக்கப்பட்ட பால்ராஜ் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பலியானார்.  

இந்நிலையில் கம்பம் அருகே சண்முகா அணை பகுதியில் 7 நாட்களாக சுற்றி திரிந்த அரிசி கொம்பன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. யானையை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் பல பகுதிகள் அடர் வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து விட்டது.

மசினி யானை

இதற்குள் 'அரிக்கொம்பன்' யானை புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனை பிடிப்பதற்காக மே  28ம் தேதி சுயம்பு, உதயன், அரிசி ராஜா (எ) முத்து ஆகிய 3 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன.  இந்நிலையில் அரிக்கொம்பன் யானை உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகநாதர் கோவில் வனப்பகுதியில் சுற்றித்திரிவதாக கூறப்பட்டது. அந்த யானை வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்த நிலையில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web