ஆவின் பொருட்கள் மீண்டும் விலை உயர்வு!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
ஆவின்

தமிழக அரசின் அரசுத்துறை நிறுவனங்களில் ஒன்று ஆவின். இந்நிறுவனம் பாலை முகவர்களிடமிருந்து கொள்முதல் செய்து பால் மற்றும் பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் பால் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து தற்போது  பன்னீர் மற்றும் பாதாம் பவுடர் விலை ரூ20 முதல் ரூ100  வரை உயர்த்தி ஆவின் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது  

ஆவின்

அதாவது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆவின் விற்பனையகங்களில், பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் பொருட்களின் விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

ஆவின் பால் லாரி


இன்றை விலை நிலவரப்படி   ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும்  ஒரு கிலோ ஆவின் பன்னீரின் விலை ரூ.450ல் இருந்து ரூ.550ஆகவும்   அரை கிலோ பன்னீர் ரூ.250 லிருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.    ஆவின் நிறுவன 200 கிராம் பாதாம் பவுடர் விலை ரூ.100ல் இருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.   உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலையை திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கி விடுத்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web