30 வயதில் சோகம்... பிரபல பாடகி அகால மரணம்!

 
பாடகி பார்க் போ ராம்

இதெல்லாமா சாகுற வயசு என்று ப்ச் கொட்டுகிறார்கள் கொரியன் பாப் இசை ரசிகர்கள். 30 வயசு தான் ஆச்சு. நேற்றிரவு தென் கொரிய பாடகி பார்க் போ ராம் அகால மரணமடைந்தார். 

தென் கொரியாவைச் சேர்ந்த பாடகி பார்க் போ ராம், தனது மயக்கும் இசையாலும், வசீகரிக்கும் குரலாலும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.  தன்னுடைய குரலுக்கு மயங்கிய ரசிகர்களின் ஆதரவில் ‘XANADU எண்டர்டெயின்மெண்ட்’ என்ற சொந்தமாக ஒரு இசை  நிறுவனத்தையும் துவங்கியிருந்தார். தன்னுடைய 20வது வயதில் பாடல் பாடத் துவங்கிய பார்க், தனது இசையால் கடந்த 10 வருடங்களாக தென்கொரிய பாப் இசையுலகில் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தார்.  

பாடகி பார்க் போ ராம்

எத்தனை வேகமாக புகழின் உச்சிக்கு சென்றாரோ, அதே வேகத்தில்  30 வயதிற்குள் அவரது இசைப்பயணம் முடிவுக்கு வந்துள்ளது இசை ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பாடகி பார்க் போ ராம் நேற்றிரவு திடீரென காலமானதாக ‘XANADU என்டர்டெயின்மென்ட்’ கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த சோகத்துடன் பார்க் போ ராமை ஆதரிக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை தெரிவிக்கிறோம். பார்க்கின் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பிறகு இறுதிச்சடங்கு நடைபெறு விவரங்கள் தெரிவிக்கப்படும். பார்க்கிற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்’ எனத் தெரிவித்துள்ளனர்.  

பாடகி பார்க் போ ராம்

நேற்றிரவௌ மதுபான பார் ஒன்றில் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து பாடகி மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், இரவு 9:55 மணிக்கு கழிவறைக்குச் சென்றவர், நீண்ட நேரம்  கழித்தும் வராததால் அவரது தோழிகள் கழிவறைக்குச் சென்று பார்த்த போது சிங்க் மீது சுயநினைவின்றி விழுந்து கிடந்திருக்கிறார். 

உடனடியாக ஹன்யாங் பல்கலைக்கழக குரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரவு 11:17 மணிக்கு இறந்து விட்டதாக அறிவித்தார்கள். அவரது இறப்பை மர்ம மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web