அடேங்கப்பா...!! பணியாளருக்கு ரூ1500 கோடியில் வீடு !! பரிசு கொடுத்து அசத்திய அம்பானி !

 
நீதா அம்பானி

இந்தியாவிலேயே பெரும் பணக்காரர்களில் முதன்மையானவரான ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, எரிபொருள் சுத்திகரிப்பு, ஆடைகள், தொலைதொடர்பு, சில்லறை வணிகம் என பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வெற்றி பெற்று வருகிறார்.

இந்த உயர்வுக்கு தனது நிறுவன ஊழியர்களும் ஒரு காரணம் என கருதி அவர்கள் மீது பெரும் கொண்டவர் முகேஷ் அம்பானி என கூறுவது உண்டு. ஊழியர்களுக்கு சரியான வசதிகளை ஏற்படுத்தி தருவதன் அவர்களை ஊக்கப்படுத்துவதிலும் தவறுவதில்லை. 

அந்த வகையில் தான், தனது நிறுவன ஊழியர் ஒருவருக்கு முகேஷ் அம்பானி 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ள பரிசு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீதா அம்பானி

முகேஷ் அம்பானியின் வலதுகரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படும் மனோஜ் மோடி என்பவருக்கு 1.7 லட்சம் சதுர அடி பரப்பளவில் 22 மாடிகளைக் கொண்ட கட்டடம் பரிசாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடானது, மும்பையில் நேபியன் கடல் சாலையில் அமைந்துள்ளது. இந்த வீட்டிற்கான சில பொருட்கள் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 மனோஜ் மோடி கல்லூரியில் முகேஷ் அம்பானியுடன் சேர்ந்து படித்தவர் ஆவார். இவர்கள் மும்பை பல்கலைக்கழகத்தில் வேதியியல் தொழில்நுட்பத்தில் இவர்கள் ஒன்றாக பயின்றுள்ளனர்.  தொடர்ந்து, 1980களில் ரிலையன்ஸ் குழுமத்தை திருபாய் அம்பானி வழிநடத்தியபோது, அந்த நிறுவனத்தில் மனோஜ் மோடி ஊழியராக சேர்ந்துள்ளார். முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானியுடன் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பராக பழகியுள்ளார்.

நீதா அம்பானி 

ரிலையன்ஸ் குழுமம் பல பில்லியன் டாலர் மதிப்பிலான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட மனோஜ் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் மிகவும் எளிமையானவர் என கூறப்பட்டாலும்,  தொழில் விவகாரத்தில் மிகவும் கைதேர்ந்தவர் என கூறப்படுகிறது. தற்போது மனோஜ் மோடி ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.  

From around the web