வளிமண்டலச் சுழற்சி.. இன்று தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!! அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று வடகிழக்கு பருவமழை  தொடக்கம்!      நம்ம மாவட்டத்திற்கு கனமழை !

தென்மேற்குப் பருவமழை நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று ஜூன் 2ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,  தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும், சில குறிப்பிட்ட இடங்களில் பலத்த அல்லது கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை கனமழை

இன்று பகல் நேரத்தில் வெயில் நிலவினாலும், இரவு நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°C ஆகவும் இருக்க வாய்ப்புள்ளது. மேலும், தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 6 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இரவு நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 40% வரை உள்ளது என்றும் வானிலை தரவுகள்  தெரிவித்துள்ளன.