+2 பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு... பொதுத்தேர்வு கேள்வி தாளில் மாற்றம்!

 
தேர்வு

12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இன்னும் சரியாக 20 நாட்களே உள்ளன. மார்ச் 1ம் தேதி முதல் தமிழகத்திலும், புதுவையிலும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது. இந்த வருடம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 7.25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

இந்த வருட பொதுத்தேர்வை எவ்வித குழப்பமும் இல்லாமல் நடத்துவதற்கு தேர்வுத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. குறிப்பாக, பொதுத்தேர்வு சமயங்களில் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்து விடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு

தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி கையேடு வழங்கப்பட்டுள்ளது. அதில் தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டிலும் வினாக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் கேள்விகளின் வரிசை மாற்றப்பட்டு இருக்கும். ஒரு தேர்வு மையத்தில் உள்ள மாணவர்களுக்கு ஏ, பி, என 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும். இந்த 2 வகையான வினாத்தாள் வரிசை எண் மாற்றப்பட்டு இருக்கும். இதனால் மாணவர்கள் அருகருகே இருந்தாலும் விடைத்தாளை பார்த்து எழுத முடியாது.

ஊரகத் திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு

இந்த புதிய முறை குறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் கேட்ட போது இந்த முறை 15 வருடத்திற்கு முன்பே இருந்து உள்ளது. ஏ, பி, சி, டி என 4 வகையான வினாத்தாள் தயாரிக்கப்படும். தற்போது 2 வகையில் வினாத் தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க முடியும் என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web