ஆகஸ்ட் 15ம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!
இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி 78வது சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. அப்போது நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சுதந்திர தின விழாவில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை முக்கிய சுற்றிறக்கையை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட வேண்டும்.

அதன் பிறகு தேசியக் கொடியை தலைகீழாகவோ அல்லது கிழிந்த கொடியையோ ஏற்றி வைக்கக்கூடாது. இதனையடுத்து பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள் மற்றும் மலர்கள் இவைகளால் அலங்கரிப்பதோடு பெற்றோர்களையும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கலாம். மேலும் தேசிய கொடியை ஏற்றும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
