கடைசி டெஸ்ட் போட்டி!! இந்தியா வெற்றி பெறுமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

 
இந்தியா- ஆஸ்திரேலியா

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இப்போட்டியின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த கேமரூன் க்ரீனும், கவாஜாவும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் சேர்த்தது. க்ரீன் 114 ரன்களிலும், கவாஜா 180 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்தியா- ஆஸ்திரேலியா

அபாரமாக ஆடிய கேமரூன் கிரீன் பவுண்டரி அடித்து தனது முதலாவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். இந்தியாவில் தனது கன்னி சதத்தை ருசித்த 6-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அணியின் ஸ்கோர் 378ஆக உயர்ந்த போது ஒரு வழியாக இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பிரித்தார்.

இதையடுத்து வந்த பின்கள வீரர்களும் இந்திய பந்துவீச்சை சமாளித்து ரன்களை குவித்ததால், ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்தியா- ஆஸ்திரேலியா

மேலும் இந்திய மண்ணில் 26-வது முறையாக 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்தியா ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்தது. இந்த நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்துள்ளது. 

இந்தியாவில் ஒரு டெஸ்டில் முதல் இன்னிங்சில் 479 ரன்னுக்கு மேல் எடுத்த எந்த அணியும் இதுவரை தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை அள்ளினார். 

From around the web