திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் திடீர் மறைவு... திரைப் பிரபலங்கள் இரங்கல்!
தமிழ் சினிமாவின் 'திரைக்கதை மன்னன்' என்று புகழப்படும் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், சென்னையில் மாரடைப்பு காரணமாக இன்று (ஜூன் 27) காலையில் காலமானார். வீட்டில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அத்துடன் மாரடைப்பால் சுயநினைவை இழந்துள்ளார். உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக அறிமுகமாகி திரையுலகில் பல உச்சங்களை தொட்டவர் நடிகர், இயக்குநர் பாக்கியராஜ் . இவருக்கு வயது 73. இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவால் கடந்த 10ஆம் தேதி காலமான நிலையில், ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அவரது சிஷ்யனாக வலம்வந்த பாக்கியராஜ்-ம் தற்போது காலமானது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு பெரும் ஜாம்பவான்களும் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என் பன்முக திறமையுடன் வலம் வந்த பாக்யராஜ், 'திரைக்கதை மன்னன்' என இன்றளவும் போற்றப்பட்டு வருகிறார். பாக்கியராஜ் 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை யதார்த்தமாகவும், சுவாரஸ்யமான திருப்பங்களுடனும் படமாக்குவதில் தனித்திறமை வாய்ந்தவர். 'சுவரில்லாத சித்திரங்கள்' (1979) மூலம் இயக்குனராக அறிமுகமானார். 'புதிய வார்ப்புகள்', 'முந்தானை முடிச்சு' உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.இவரது திடீர் மறைவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
