இரவு நேரங்களில் ஹாரன், பட்டாசுகளுக்கு தடை... தமிழக அரசு அதிரடி உத்தரவு!

 
ஹாரன்
 தமிழக அரசு ஒலி மாசை கட்டுப்படுத்த எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.இது குறித்து அதிகாரிகள்  “ நியமிக்கப்பட்ட அளவை காட்டிலும்  அதிகமாக ஒலி மாசு இருந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  அதன்படி அமைதி மண்டலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஹாரன் அடிக்கக்கூடாது.

பட்டாசு விபத்து

இதேபோன்று இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் சத்தத்தை ஏற்படுத்தும் பட்டாசுகள் மற்றும் கட்டுமான கருவிகளையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு
அதன் பிறகு ஒலி மாசுவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆர்டிஓக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஒலி மாசு இருப்பதாக புகார் வந்தால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web