BREAKING!! தமிழகம் முழுவதும் பேனர் வைக்கத் தடை!!

 
BREAKING!!  தமிழகம் முழுவதும் பேனர் வைக்கத் தடை!!


தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

BREAKING!!  தமிழகம் முழுவதும் பேனர் வைக்கத் தடை!!


அதன்படி திருவிழாக்கள், குடும்ப விழாக்கள்,கண்ணீர் அஞ்சலி என அனைத்திற்கும் பேனர் வைக்கும் கலாச்சாரம் பெருகி வருகிறது. இவை பல நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் சில நேரங்களில் பலைன் உயிரையும் பறித்து விடுகிறது.


இதனால் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை தாமே முன்னெடுக்கும் வகையில் பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

BREAKING!!  தமிழகம் முழுவதும் பேனர் வைக்கத் தடை!!


இந்நிலையில் பேனர் வைக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க மாட்டார் எனக் கூறுவது மட்டும் போதாது. ஆளுங்கட்சி விதிகளை பின்பற்றாமல் எந்தப் பேனரும் வைக்க அனுமதிக்கக் கூடாது. மேலும் இவ ஆளுங்கட்சிக்கு மட்டும் கிடையாது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இதை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அரசு அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

From around the web