உலக அரசியலில் பரபரப்பு... ரூ19000 கோடி மதிப்பில் வங்கதேசம் சீனாவிடம் இருந்து 20 போர் விமானங்கள் கொள்முதல்!

 
வங்கதேசம்

 

வங்கதேச வான்படையை நவீனப்படுத்தும் நோக்கில் சீனாவிடம் இருந்து சுமார் 19,000 கோடி ரூபாய் மதிப்பில் 20 அதிநவீன ஜே-10சிஇ ரக போர் விமானங்களை வாங்க அந்நாட்டு இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இத்தொகையை அடுத்த 10 ஆண்டுகளில் தவணை முறையில் சீனாவுக்குச் செலுத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த 4.5-ம் தலைமுறை போர் விமானங்களை வரும் 2027-ம் ஆண்டிற்குள் தனது வான்படையில் முழுமையாக இணைக்க வங்கதேசம் இலக்கு நிர்ணயித்துள்ளது. வான் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பிராந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு நடுவிலும் ராணுவச் கட்டமைப்பை மேம்படுத்துவதில் வங்கதேசம் தீவிர கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சீனா தயாரிப்பான இந்த நவீன போர் விமானங்கள் வருகையால் வங்கதேச வான்படையின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தப் பெரிய அளவிலான வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் குறித்தும் சீனாவுடன் முறையான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

Bangladesh plans to buy 20 Chinese J-10CE fighter jets in $2.2 billion deal: Report | Defence News India

படிப்படியான தவணை முறை செலுத்துதல் திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் மீது பெரிய சுமை விழாமல் இருக்க அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அனைத்து விமானங்களையும் பெற்றுத் தனது ராணுவத் தளவாடங்களை நவீனமயமாக்குவதில் வங்கதேச அரசு தீவிரமாக உள்ளது. இந்த ராணுவ ஒப்பந்தம் தொடர்பான கூடுதல் விவரங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த ஒப்பந்தம் தெற்காசிய அரசியல் சூழலிலும் மாற்றங்களை உருவாக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.