வங்கி வாடிக்கையாளர்களே உஷார்... மே 1 முதல் ஏடிஎம் விதிமுறைகளில் மாற்றம்!

 
ஏடிஎம்

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சில வகையான மாற்றங்கள் விதிமுறைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் மே மாதம் முதல் ஏடிஎம் விதிமுறைகளில் பெருமளவு மாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் பெறக்கூடிய இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. சொந்த வங்கி ஏடிஎம்களுக்கும் பிற வங்கிகளால் இயக்கப்படும் ஏடிஎம்களுக்கும் வெவ்வேறு எண்ணிக்கையில் இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படும்.
மெட்ரோ நகரங்களில், வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 3  இலவச பரிவர்த்தனைகளைப் பெறலாம். பிற நகரங்களில் மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகள் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்புகள் நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் இரண்டிற்கும் பொருந்தும்.


வாடிக்கையாளர்கள் தங்கள் மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்புகளை மீறினால், வங்கிகள் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.23 வசூலிக்க அனுமதிக்கப்படுகின்றன. இதுவும் நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் இரண்டிற்கும் பொருந்தும். சில பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் வரிகளும் தனியே வசூலிக்கப்படும்.
HDFC வங்கியின் வலைத்தளத்தில்  மே 1, 2025 முதல், இலவச வரம்பைத் தாண்டிய ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ. 21 + வரிகள் என்பதில் இருந்து ரூ. 23 + வரிகள் ஆக உயர்கிறது. இண்டஸ்இண்ட் வங்கி வலைத்தளத்தின்படி, “மே 1, 2025 முதல், இண்டஸ்இண்ட் வங்கி அல்லாத பிற ஏடிஎம்களில் இலவச வரம்புகளுக்கு அப்பால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ 23  வசூலிக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web