சென்னை மக்களே உஷார்.... செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்க வாய்ப்பு!

 
செம்பரம்பாக்கம் ஏரி
சென்னையிலும், புறநகர் பகுதியிலும் நேற்றிரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

சென்னை, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை மேலும் இரு தினங்களுக்கு நீடிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னையில் எழும்பூர், கிண்டி, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், அண்ணா சாலை, மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி, வண்ணாரப்பேட்டை, அசோக் நகர், கோயம்பேடு, பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  

மழை

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள துணை ஏரிகள் நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் 80 சதவீதம் நீர் நிரம்பியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து நீர் திறந்து விடுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.  

ஆலோசனைக்கு பின்னர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக எவ்வளவு நீர் திறக்கப்படும் என தெரிய வரும். தற்போதைய நிலவரப்படி 713 கன அடி நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர் இருப்பு 2,903 டி.எம்.சிஆக உள்ளது. 24 அடி நீர்மட்டம் கொண்ட ஏரியின் நீர்மட்டம் 21.18 அடியை தற்போது எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!