கரை ஒதுங்கிய அரிய வகை திமிங்கலம்.. போராடி பத்திரமாக மீட்ட வனத்துறையினர்..!!

மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் கரை ஒதுங்கிய அரிய வகை திமிங்கலம் மீண்டும் பத்திரமாக கடலுக்குள் விடப்பட்டது.
काल सकाळ पासून हे व्हेल माशाचे पिल्लू गणपतीपुळे समुद्र किनारी वाळूमध्ये वाहत आले होते,
— मी देवेंद्र 🚩Avadhut Kelkar (@kelkaravadhut) November 14, 2023
कालपासून त्याला परत समुद्रात सोडण्यासाठी शर्थीचे प्रयत्न प्रशासन व उत्साही तरुण मंडळींच्या वतीने चालू होते.
सुमारे 4 टन एवढे वजन असलेल्या बिचाऱ्या या पिल्लाला वाळुतून बाहेर काढणे शक्य होत… pic.twitter.com/haSVlhZN4n
மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் உள்ள கணபதிபுலே கடற்கரையில் 47 அடி நீளமுள்ள திமிங்கலக் குட்டி ஒன்று சிக்கிக் கொண்டது. சுமார் நான்கு டன் எடை கொண்ட இந்த திமிங்கலக் குட்டி திங்கள்கிழமை கரைக்கு வந்தது.இங்கு கடல் நீர் திடீரென குறைந்ததால், கடற்கரை மணலில் திமிங்கலக் குட்டி சிக்கிக் கொண்டது.
இதனையடுத்து திமிங்கலம் எதிர்பாராத விதமாக மணல் திட்டில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்ததை பொதுமக்கள் பார்த்தனர். பின்னர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின் கடற்படையினர் மற்றும் வனத்துறையினரால் திமிங்கலம் கடலில் விடப்பட்டது.