ஆங்கிலேயர்களின் தூக்கத்தைக் கெடுத்த வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்!
பாஞ்சாலங்குறிச்சியில் 1760ம் ஆண்டு ஜனவரி 3ல் திக்கு விசய கட்டபொம்முவுக்கும் ஆறுமுகத்தம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். அழகிய வீரபாண்டியபுரம் என்றழைக்கப்பட்ட தற்போதைய ஓட்டப் பிடாரம் பகுதியில் ஆட்சி செய்த ஜெக வீரபாண்டியனின் அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு இருந்தார். பிறகு, 1791ல் வீரபாண்டிய கட்டபொம்மன் அரியணை ஏறினார்.

அவரது ஆட்சிக் காலத்தில் தான் திருநெல்வேலிச் சீமை, கிழக்கு இந்தியக் கம்பெனியின் அதிகார வரம்புக்குள் வந்தது. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறிப்பிடத்தக்கவர்.

1797ல் ஆலன்துரை என்ற ஆங்கிலேயேர் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தார். அவரைப் போரில் கட்டபொம்மன் தோற்கடித்தார். அதன் தொடர்ச்சியாக, கப்பம் கட்ட மறுத்த கட்டபொம்மனிடம் ஆங்கிலேய கலெக்டர் ஜாக்சன் விளக்கம் கேட்டார்.
'அந்நியனுக்குக் காவடி தூக்குவதை விட, தூக்குக் கயிறே மேல்’ என்ற மன உறுதியுடன் நெஞ்சை நிமிர்த்தி தண்டனையை ஏற்றுக் கொண்ட கட்டபொம்மன், அக்டோபர் 16, 1799ல் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார். இன்றைக்கும் கட்டபொம்மன் வீரத்தை அடுத்த தலைமுறையினரும் கொண்டாடி வருகின்றனர்.
