குண்டு கட்டாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. அதிரடி காட்டிய காவல்துறையினர்..!

 
பாஜக நிர்வாகி கைது
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை  இழிவுபடுத்தும் வகையில் கருத்தை பதிவிட்ட பாஜக நிர்வாகி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். இதற்கு இரு தரப்பினரும் மாறி மாறி கண்டனங்களை பதிவிட்டு வரும் நிலையில்,நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்  பகுதியைச் சேர்ந்த பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் தனது டிவிட்டர் பதிவில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி குறித்து இழிவுபடுத்தும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார். 

Image

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பிரவீன் ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் இன்று அதிகாலை பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழக பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வக்குமார் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

தமிழக பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் அன்புதம்பி பிரவீன் ராஜ் @SanghiPrince அவர்களை இன்று அதிகாலை 2 மணி அளவில் நாமக்கல் ராசிபுரத்தில் அவரது வீட்டில் வைத்து கைது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதற்கான காரணம் காவல்துறையின் முழு கவனமும் சமூக வலைதளத்தில் மட்டுமே இருப்பதுதான். சமூகத்திற்கு எதிரான கடும்குற்றங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை நிம்மதியாக உறங்க வைத்துவிட்டு சமூக வலைதளங்களில் திமுகவிற்கு எதிராக கருத்து சொல்லும் பாஜக இளைஞரணி நிர்வாகியை அதிகாலை கைது செய்திருக்கிறது கையாலாகத காவல்துறை. இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் வர இருக்கும் நிலையில் இதுபோன்ற அரசியல் கைது திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது. 2024 தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதிசெய்யபடுகிறது. #WeSupportPravinRaj  இதுபோன்ற அடக்குமுறைகளால் எந்தவொரு பாஜக தொண்டனையும் முடக்க முடியாது என தெரிவித்துள்ளார்.