தனக்கு தானே தீ வைத்து கொண்டு நாடகமாடிய பாஜக பிரமுகர்!! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
விஸ்வநாதன்

கோவை மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (32), என்பவர் பேக்கரியில் சூபர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பாஜவில் இணைந்துள்ளார். பேக்கரியில் பணிபுரிந்துகொண்டு கட்சி பணியிலும் ஈடுபட்டு வந்தார். எனினும் இவரால் கட்சியில் பிரபலமாக முடியவில்லை. இதனால் அனைவர் மத்தியிலும் கவனத்தை ஈர்க்க எதாவது செய்ய வேண்டும் என திட்டம்போட்டுள்ளார். 

விஸ்வநாதன்

இந்நிலையில் இவர் நேற்று பாஜக நிர்வாகிகளே தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாஜக நகரத் தலைவர் உமா சங்கர் மற்றும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ் மீது விஸ்வநாதன் புகார் அளித்துள்ளார்.  உடனடியாக இது குறித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிவந்தது.

மேட்டுப்பாளையம் பாஜக நகர தலைவர் உமாசங்கர் மற்றும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சட்டையில் தனக்குத்தானே தீ வைத்துகொண்டு நாடகமாடி, பொய் புகார் கொடுத்தது விஸ்வநாதன்  அம்பலமானது.  

விஸ்வநாதன்

இதனையடுத்து பொய்ப்புகார் கொடுத்த விஸ்வநாதன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த மேட்டுப்பாளையம் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர்,அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

From around the web