பகீர்!! பாஜக பெண் தலைவரை அடித்து கொலை செய்து ஆற்றில் வீசிய கணவர்!!

 
சனாகான்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வசித்து வருபவர்  சனா கான். இவர் பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவராக இருந்தவர். இவரது கணவர் அமித் என்ற பப்பு சாஹு மதுபானம் கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்தார் .  சாலையோர உணவகத்தையும்  நடத்தி வந்தார்.ஆகஸ்ட் 1ம் தேதி சனாகான் தனது கணவர் அமித்தை சந்திக்க ஜபல்பூர் சென்றார்  .   ஜபல்பூரை அடைந்ததும், தன் தாயை போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதன் பிறகு யாருடனும் பேசவில்லை.  அவரது குடும்பத்தினர்  சனாவை போனில்  தொடர்பு கொள்ள முடியவில்லை.

சனாகான்
இதுகுறித்து  சனா கானின் தாயார் காவல்துறையில் புகார்  அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர் . பொருளாதாரப்  பிரச்சினை காரணமாக சனாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு இருந்ததாக தெரிய வந்தது . இதனைஅடுத்து   அமித்தை பிடித்து  விசாரணை நடத்தினர்.அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  தனது மனைவி சனா கானை அடித்துக் கொலை செய்து ஆற்றில் வீசி விட்டதாக அமித் கூறினார்.  

போலீஸ்

தனக்கும், சனாவிற்கும் பணப்பிரச்சினை இருந்து வந்ததாகவும், வாக்குவாதம் முற்றிய போது தடியால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.   அவரது உடலை ஜபல்பூரிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹிரன் ஆற்றில் வீசிவிட்டதாக கூறினார். சனா கானின் உடலை மீட்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாஜக பெண் தலைவர் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டு  ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் கட்சி வட்டாரத்திலும், மகாராஷ்டிராவிலும் பெரும்  பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web