11 மீனவர்களுடன் சென்ற இந்திய மீன்பிடி படகு விபத்து... தீவிர மீட்பு பணியில் இலங்கை கடற்படை !

 
boat

இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த இந்திய மீன்பிடி படகு ஒன்று பாறை மீது மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த 11 மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை களமிறங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள டெல்ட் தீவு அருகே இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக அந்நாட்டின் கடற்படை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்து. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறப்படும் இந்த படகில் ஏற்பட்ட விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி!! தமிழர்களை  சிறை பிடித்த இலங்கை அரசு!! கொந்தளிக்கும் மீனவர்கள்!!

சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கை பகுதிக்குள் நுழைந்த அந்தப் படகு பாறையில் மோதியதால் அதன் கட்டமைப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கடற்படை தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் படகில் இருந்த 11 மீனவர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், உடனடியாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான மீனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், இது தொடர்பான அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மீனவர்கள் இலங்கை கச்சத்தீவு படகு

இந்தியா மற்றும் இலங்கை இடையேயான உறவில் மீனவர் பிரச்சினை நீண்ட காலமாகவே ஒரு மிக முக்கியப் பேசுபொருளாகத் தொடர்கிறது. எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விவகாரத்தில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுவதுடன் இரு நாடுகளின் மீனவர்களையும் பெரிதும் பாதிக்கிறது.