படகில் பயங்கர தீ விபத்து... ஒருவர் பலி... பகீர் வீடியோ!

 
படகு

 

இந்தோனேசியா நாட்டில் உள்ள கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் படகு ஒன்றில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலரை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். படகில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீ விபக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Passengers rescued as second ferry in days catches fire in Indonesia - The Hindu

இதுபோன்ற கடல் வழிப் பயணங்களின் போது பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. தொடர்ந்து விபத்துகள் நடப்பதைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.