பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் பொதுமக்கள் மீது குண்டுவீச்சு... பகீர் வீடியோ!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அந்நாட்டு ராணுவத்தின் ஒடுக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்குள்ள பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் தலைமையிலான படைகள் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
🚨 BIG: Pakistani Army dropped bombs by drone at protest site in Rawalakot, PoK, Awami Action Committee releases video.
— Shivank Mishra (@shivank_8mishra) June 29, 2026
According to the Awami Action Committee between 12:00 a.m. and 1:00 a.m. today four RDX-like explosive devices fitted with timers were dropped by a drone over… pic.twitter.com/PeNp7OXEmG
இந்தச் சூழலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியான முறையில் போராடி வரும் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் மனிதநேயமற்ற முறையில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி மக்களின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அவர்கள் கூடும் இடங்களில் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களால் ஏராளமான பொதுமக்கள் பலத்த காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பாகிஸ்தான் அரசின் இந்த அத்துமீறிய செயல்பாட்டைக் காட்டும் காணொளிப் பதிவுகள் இணையத்தில் வெளியாகி உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தங்களது சொந்த நாட்டு மக்கள் மீதே ராணுவம் இத்தகைய குண்டுவீச்சுகளை நடத்துவதற்குப் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. இந்த ஒடுக்குமுறை காரணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழலே நீடித்து வருகிறது.
