பயங்கரம்!! கை, கால்கள் கட்டப்பட்டு பாலியல் கொடுமை செய்து சிறுவன் கொலை!!

 
மதியரசு

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஆதிமூலம். இவர்  பொக்லைன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் 6 வயது  மதியரசு.  இவன் கடத்தூர் பகுதியில்  தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். ஜூலை 16ம் தேதி மாலை வீட்டின் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில்  சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.   மீண்டும் வீடு திரும்பவில்லை.  அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடித் திரிந்தனர். சிறுவன் காணாமல் போனதை அடுத்து காவல்நிலையத்தில் புகார்  அளித்தனர்.

மதியரசு

அதன் பேரில் இதன் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.  இந்நிலையில் அந்த பகுதியில்   மேல்நிலை குடிநீர் தொட்டியில் மதியரசு பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது . காவல்துறையினர் நேரில் சென்று பார்வையிட்ட போது சிறுவனின் கழுத்தில் காயம் இருப்பது தெரியவந்தது.  காவல்துறையினர்  சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து   வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிறுவனை உறவினர் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  6 வயது சிறுவனை ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலீஸ்

இந்தச் சிறுவனின் உறவினரான 18 வயது  பிரகாஷ் என்பவர் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மொபைலை   தராததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில், திடீர் திருப்பமாக பாலியல் தொல்லை செய்து கொலை செய்துள்ளார். சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து தொட்டியில் வீசி சென்றுவிட்டதாக பிரகாஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில்  சிறுவனை ஒருவர் மட்டும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கூட்டாகத்தான் கொலை செய்திருக்க வேண்டும் என காவல்நிலையம் முன்பு  சிறுவனின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web