அதிர்ச்சி!! காதலியை டேங்கர் லாரியில் தள்ளி கொலை செய்த காதலன்!!

 
திருப்பதி

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பாச்சுப்பள்ளி பகுதியில் காதலர் ஒருவர் தம்முடைய காதலியை தண்ணீர் டேங்கர் லாரி முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். அவர் கண்முன்னே காதலி   லாரி சக்கரத்தில் சிக்கி அந்த பெண் துடிதுடித்து உயிரிழந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்   அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேங்கர் லாரி

இதன் பின் அந்த பெண் குறித்து விசாரணை நடத்திய போது, அவர் கமரெட்டி மாவட்டத்தில் வசித்து வருபவர் என்பதும் அவருடைய பெயர்  பிரமிளா  என்பதும் தெரிய வந்தது. அவர் பாச்சுப்பள்ளியில் உள்ள பிரஜ்டீஜ் ஷோரூமில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.  அவரை  தண்ணீர் டேங்கர் லாரியில் தள்ளி விட்டுக் கொலை செய்தது அவரது காதலன் திருப்பதி தான் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில்  ஓட்டுநரான திருப்பதியிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பிரமிளா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். நே இந்த பிரச்சினை அவர்களுக்குள் கடும் வாக்குவாதமாக மாறிய நிலையில்  ஆத்திரமடைந்த திருப்பதி, தனது காதலி பிரமிளாவை தண்ணீர் டேங்கர் லாரி முன்பு தள்ளி திட்டமிட்டுக் கொலை செய்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது.  

சிறுவன் கைது


பிரமிளா தங்கியிருந்த விடுதிக்கு அடிக்கடி வந்து சென்ற திருப்பதி, இந்த கொலையைச் செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.   அவரை தனிப்படை அமைத்து சுற்றி வளைத்த  போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தண்ணீர் டேங்கர் லாரி முன்பு காதலியைத் தள்ளி காதலனே கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும்  பெரும்  பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web