பிரம்மோஸ் ஏவுகணை வடிவமைப்பாளர் அலெக்சாண்டர் காலமானார்!

 
அலெக்சாண்டர் பிரம்மோஸ் ஏவுகணை வடிவமைப்பாளர் அலெக்சாண்டர் பிரம்மோஸ் ஏவுகணை வடிவமைப்பாளர்

விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் உலகையே வியக்க வைத்த ரஷ்யாவின் தலைசிறந்த வடிவமைப்பாளர் அலெக்சாண்டர் லியோனோவ் (74) காலமானார். இவரது மறைவு ரஷ்யாவிற்கு மட்டுமல்லாமல், இந்தியப் பாதுகாப்புத் துறைக்கும் ஒரு மிகப்பெரிய இழப்பாகும்.

அலெக்சாண்டர் லியோனோவ், ரஷ்யாவின் புகழ்பெற்ற NPO மஷினோஸ்ட்ரோயேனியா நிறுவனத்தின் பொது இயக்குநர் மற்றும் தலைமை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்தார். இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் உருவாகும் அடுத்த தலைமுறை பிரம்மோஸ் ஏவுகணைகளை வடிவமைப்பதில் இவருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.  ஒலியை விட 9 மடங்கு வேகமாகச் செல்லக்கூடிய, உலகின் அதிவேக ஏவுகணைகளில் ஒன்றான ரஷ்யாவின் 'ஜிர்கான்' ஏவுகணையை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.

பிரம்மோஸ்' இந்திய ராணுவம்

ஏவுகணைகள் மட்டுமின்றி, செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளிப் பாதுகாப்புத் துறையிலும் இவரது கண்டுபிடிப்புகள் பல மைல்கற்களை எட்டியுள்ளன.

74 வயதான அலெக்சாண்டரின் மரணத்திற்கான காரணம் குறித்து ரஷ்ய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. பாதுகாப்பு மற்றும் ராணுவ ரகசியங்கள் சார்ந்த முக்கியப் பதவியில் இருந்தவர் என்பதால், இவரது மறைவு குறித்துப் பல செய்திகள் உலாவுகின்றன.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான பாதுகாப்புத் தொழில்நுட்பப் பகிர்வில் அலெக்சாண்டர் ஒரு பாலமாகத் திகழ்ந்தார். பிரம்மோஸ் ஏவுகணையை உலகின் தலைசிறந்த சூப்பர்சோனிக் ஏவுகணையாக மாற்றுவதில் இவரது தொழில்நுட்பத் தரம் பெரிதும் உதவியது. இவரது மறைவிற்கு இந்தியப் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.