#BREAKING : தென்காசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து... ஆலையில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல்!

 
சங்கரன்கோவில் பட்டாசு ஆலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் பகுதியில் அமைந்துள்ளது ஏவிஎம் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை. இந்த பட்டாசு ஆலையில் வழக்கம் போல் இன்று பணியாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தன. இந்நிலையில் மதிய வேளையில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு பெட்டிகள் திடீரென வெடித்து. 

இதனால் பெரும் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இதுகுறித்து  சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்றும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். விபத்து குறித்து மேலும் அதிக தகவல் வெளியாகாத நிலையில், ஆலைக்குள் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில், ஆலையில் இருந்த பணியாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வரப்படுகின்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web