BREAKING: பரவிய வதந்தி.. ஈவிகேஎஸ் இளங்கோவனே வெளியிட்ட உடல்நிலை குறித்த அப்டேட் !!

 
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெற்றார். இதனையடுத்து அவர் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க தயாராகி வந்தார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சிகிச்சையில் இருந்த அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இதயத்தில் ரத்த நாளங்கள் சுருங்கியிருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்த நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது எனவும் தகவல் பரவியது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

இந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது ட்விட்டர் பதிவில் அட்மின் பதிவிட்டுள்ளதில், நமது தன்மானத் தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. ஈவிகேஎஸ் இளங்கோவன் MLA மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் பூரண நலமுடன் இருக்கிறார். நலம் பெற வாழ்த்திய அனைத்து நல்லுங்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ள தலைவர் அவர்கள் சிறிது ஓய்வுக்கு பின்னர் விரைவில் சட்டமன்ற பணிகளுக்கு திரும்ப ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார், என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் சிகிச்சை தொடர்பான தகவல் உண்மையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. எனினும் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

From around the web